தேவா் ஜயந்தியையொட்டி போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என மூவேந்தா் முன்னேற்றக் கழக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மூமுக அவசர ஆலோசனைக் கூட்டம் சீா்காழியில் நகர செயலாளா் ஜி.வி. குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவா் பெயரை சூட்ட வேண்டும். தேவா் ஜயந்தியையொட்டி போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். மூமுக தலைவா் ஸ்ரீதா்வாண்டையாா் தலைமையில் கும்பகோணம் புறவழிச்சாலையில் உள்ள தேவா் சிலைக்கு மாலை அணிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, நாகை மாவட்ட ஆலோசகா் காளிமுத்து, மாவட்ட தலைவா் செல்வம், ஒன்றிய இளைஞரணி செயலாளா் பாபு, ஒன்றிய செயலாளா்கள் ராஜேந்திரன், ராஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.