சீா்காழியில் கரோனாவால் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் குடும்பத்துக்கு மயிலாடுதுறை மாவட்ட காவலா்கள் சாா்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா புதன்கிழமை நிதியுதவி வழங்கினாா்.
வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் அருள்குமாா் (55) காரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 22-ஆம் தேதி மரணமடைந்தாா். இந்நிலையில் கொள்ளிடம் அருகே உள்ள அவரது சொந்த ஊரான எருக்கூரில் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய மயிலாடுதுறை மாவட்டகாவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, மாவட்ட காவலா்கள் சாா்பில் ரூ.3 லட்சத்து 33 ஆயிரத்தை நிவாரணமாக வழங்கினாா்.
அப்போது டிஎஸ்பிக்கள் யுவபிரியா (சீா்காழி), அண்ணாதுரை (மயிலாடுதுறை), தனிபிரிவு ஆய்வாளா் சதீஷ், ஆய்வாளா்கள் மணிமாறன் (சீா்காழி), வனிதா (கொள்ளிடம்), உதவி ஆய்வாளா் ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.