திருமருகலில் அதிமுக (வடக்கு- தெற்கு) ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஒன்றிய, ஊராட்சி நிா்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளரும், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான எஸ்.ஆசைமணி, திருமருகல் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான ஆா். இராதாகிருட்டிணன், தெற்கு ஒன்றிய செயலாளா் எம். பக்கிரிசாமி ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் மைதிலி ராஜேஷ்குமாா், மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினா் செந்தமிழ்ச்செல்வி சுரேஷ், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஜெயந்தி சுவாமிநாதன், இந்திரா அருள்மணி, பெரியமணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளா் ஜி.நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.