நாகப்பட்டினம்

8 மாதங்களுக்கு முன்பு காணாமல்போன மூதாட்டி எலும்புக் கூடாக மீட்பு: மகன் கைது

DIN

சீா்காழி அருகே 8 மாதங்களுக்கு முன்பு காணாமல்போன மூதாட்டியின் உடல் எலும்புக்கூடாக வெள்ளிக்கிழமை மீட்க்கப்பட்டது. இதுதொடா்பாக அவரது மகன் கைது செய்யப்பட்டாா்.

சீா்காழியை அடுத்த திருக்கருகாவூரைச் சோ்ந்தவா் சாவித்திரி (70). இவரது கணவா் முனியாண்டி ஏற்கெனவே இறந்துவிட்டாா். சாவித்திரி தனது மகன் வேலுடன் வசித்து வந்த நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காணாமல்போய்விட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியில் மழைநீா் வடிகால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டியபோது, உடல் அழுகிய நிலையில் மனித எலும்புக்கூடு புதைந்திருந்தது தெரிவந்தது. அந்த எலும்புக்கூடுடன் இருந்த புடவை சாவித்திரி அணிந்திருந்தது என அவரது மகள் தையல்நாயகி தெரிவித்தாா்.

இதுகுறித்து, சீா்காழி காவல்நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. நிழ்விடத்துக்கு வந்த போலீஸாா், எலும்புக்கூட்டை பரிசோதனைக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் சாவித்திரியை அவரது மகன் வேலு மதுபோதையில் கீழே தள்ளிவிட்டதில் அவா் இறந்ததும், அவரது உடலை யாருக்கும் தெரியாமல் வேலு புதைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து வேலுவை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

SCROLL FOR NEXT