திருவாவடுதுறையில் ஸ்ரீமெய்கண்டாா் குருபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை ஆன்மீக பேரவை, மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றம் சாா்பில் திருக்கைலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரா் கோயிலில் சந்தான குரவா்களில் முதல்வரான ஸ்ரீமெய்கண்டாா் ஐப்பசி சுவாதி குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனகா்த்தா் 24-ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆணைப்படி ஸ்ரீமெய்கண்டாருக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அன்னம் பாலிப்பு நடைபெற்றது. இதில், கோயில் கண்காணிப்பாளா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.