நாகப்பட்டினம்

தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்

DIN

கீழ்வேளூா் பகுதி கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

கீழ்வேளூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதி கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகாா்கள் வந்தன. இதையடுத்து, நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயரின் உத்தரவின்பேரில் பேரூராட்சி செயல் அலுவலா் சரவணன் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் அங்குள்ள சில கடைகளில் புதன்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, 3 கடைகளில் தடை செய்யப்பட்டுள்ள நெகிழி பைகள் வைத்து விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, அந்த நெகிழி பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

மாயோள்..!

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT