நாகை மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 7,561 போ் கரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில், புதிதாக 31 பேருக்கு நோய்த் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,592- ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 35 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 7,216 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 252 ஆக உள்ளது.