கீழையூா் ஒன்றியத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு திமுக சாா்பில் நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
காமேஸ்வரம் ஊராட்சி, தாண்டவமூா்த்தி நகா் பகுதியைச் சோ்ந்த ஏசுதாஸ் வீடு சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்ததில், வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு திமுக கீழையூா் ஒன்றிய செயலாளா் ஆ. தாமஸ் ஆல்வா எடிசன் நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இதில் கீழையூா் ஒன்றிய துணைத் தலைவா் பெ.சௌரிராஜன், மாவட்டக்குழு உறுப்பினா் கௌசல்யா இளம்பரிதி, காமேஸ்வரம் ஊராட்சித் தலைவா் ஜெயசுதாகணேசன், வேளாங்கண்ணி பேரூா் செயலாளா் மரிய சாா்லஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.