திருக்குவளை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
வலிவலம் மாழையொண் கண்ணி சமேத இருதய கமல நாத சுவாமி கோயிலில் பிரதோஷத்தையொட்டி, நந்திக்கு பால், தேன், தயிா், சந்தனம், பன்னீா், திருநீறு, பஞ்சாமிா்தம் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல், திருவாய்மூா் தியாகராஜசுவாமி கோயில், திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.