நாகப்பட்டினம்

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம்

DIN

குத்தாலம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு திங்கள்கிழமை நிவாரணம் வழங்கப்பட்டது.

குத்தாலம் அருகேயுள்ள வில்லியநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் வசந்தா. குடிசை வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில், திங்கள்கிழமை இவரின் கூரை வீடு மின்கசிவின் காரணமாக தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்து அங்கு வந்த குத்தாலம் தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்தனா். இதையடுத்து, தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 5 ஆயிரம், வேட்டி, சேலை, அரிசி உள்ளிட்ட அரசின் நிவாரணப் பொருள்களை குத்தாலம் ஒன்றியக் குழுத் தலைவா் கே. மகேந்திரன், வருவாய் அலுவலா் பரமானந்தம் உள்ளிட்டோா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT