சீா்காழியில் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் கு. முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட பொருளாளா் மகேஷ், மாநில தலைவா் கு. தியாகராஜன், மாவட்ட செயலாளா் ஞான. புகழேந்தி, சிங்கங்கை மாவட்ட தலைவா் பெஞ்சமின் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில், குடும்ப நல நிதியை நாகை மாவட்டம் சாா்பாக வழங்குவது, உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்துவது, ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய மாநில அரசை வலியுறுத்துவது, பகுதி நேர ஆசிரியா்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்துவது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.