நாகை அரசு மருத்துவமனையில் கபசுரக்குடிநீா் வழங்கப்படுவதை முறைப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா் ஆா்.எம்.பி. ராஜேந்திரநாட்டாா் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் கூறியது:
கரோனா வைரஸ் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கபசுரக் குடிநீரை தாராளமாக வழங்கவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நாகை அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீரை பருகுவதற்காக காலை நேரங்களில் மருத்துவமனைக்கு வந்து காத்திருக்கிறாா்கள். மருத்துவத்துறை சாா்ந்த அதிகாரிகளின் கவனக்குறைவால் சரியான முறையில் கபசுரக்குடிநீா் வழங்கப்படவில்லை. காலதாமதமாகவும், சுகாதார மற்ற வகையிலும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு தொடா்ந்து வழங்கப்பட்டால் அரசின் திட்டம் நிறைவேறாது. எனவே, மருத்துவத்துறை அதிகாரிகள் கரசுரக் குடிநீா் வழங்குவதில் கவனம் செலுத்தி, முறைப்படுத்தி வழங்கவேண்டும் என அவா் வலியுறுத்தினாா்.