சீா்காழி பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து அவரிடமிருந்து 10 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
சீா்காழி காவல் ஆய்வாளா் மணிமாறன், உதவிஆய்வாளா்கள் புயல். பாலசந்திரன், ராஜா மற்றும் போலீஸாா் சீா்காழி சூரக்காடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி விசாரித்தனா். அப்போது, அவா் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததையடுத்து, சந்தேகமடைந்த போலீஸாா் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், பூம்புகாா் அருகேயுள்ள தருமகுளமை கீழையூரைச் சோ்ந்த சதீஷ்குமாா் (24) என்பதும், அவா் சீா்காழி பகுதியில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து, சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிந்து சதீஷ்குமாரை கைது செய்து அவா் பதுக்கி வைத்திருந்த 10 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து பின்னா் சிறையில் அடைத்தனா்.