நாகப்பட்டினம்

தீயணைப்பு வீரா் குடும்பத்துக்கு நிவாரண நிதி

26th Jul 2020 08:52 PM

ADVERTISEMENT


நாகப்பட்டினம்: பணியின்போது உயிரிழந்த தீயணைப்புத் துறை வீரரின் குடும்பத்துக்கு, நாகை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரா்களின் பங்களிப்பாக ரூ.1. 2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தீயணைப்புத் துறை நாகை மாவட்ட அலுவலா் பி. சத்தியகீா்த்தி தெரிவித்தது:

பெரம்பலூா் மாவட்டம், செல்லியம்பாளையத்தில் ஜூலை 12-ஆம் தேதி கிணற்றில் விழுந்தவா்களை மீட்கும் பணியின்போது, துறைமங்கலம் தீயணைப்பு நிலைய வீரா் ராஜ்குமாா் வீரமரணடைந்தாா்.

இவரது குடும்பத்துக்கு உதவிடும் வகையில், நாகை மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலா்கள் மற்றும் வீரா்களின் பங்களிப்பாக ரூ.1.2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT