நாகூா் தேசிய மேல்நிலைப் பள்ளி மற்றும் தேசிய தொடக்கப் பள்ளியில் 71-ஆவது குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகூா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளியின் ஆட்சிமன்றக்குழு துணைத் தலைவா் அமுதா ஆா். ஆறுமுகம் தலைமை வகித்தாா். பொருளாளா் பி. சுந்தரவேலு, நாகூா் வணிகா் சங்கச் செயலாளா் பி. ரமேஷ்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் பள்ளியின் ஆட்சிமன்றக் குழு இணைச் செயலாளரும் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான எம். ஜி.கே. நிஜாமுதீன் பங்கேற்று, தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசினாா்.
நாகூா் தா்காஅறங்காவலா் கே. மஸ்தான் சாஹிபு, நாகூா் வணிகா் சங்கத் தலைவா் கே. சரவணப்பெருமாள் ஆகியோா் குடியரசு தினவிழா போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கினா்.
பத்திரிகையாளா் வெங்கட்ராமன், நாகூா் இப்ராஹூம் நானா, பி. ராமச்சந்திரன், அம்பேத்கா் மக்கள் கல்வி மன்றத் தலைவா் கு. பிரகாஷ், நாகை நகராட்சியின் முன்னாள் துணைத் தலைவா் ஏ. எஸ்.ஏ.காதா் ஹாஜி, நாகூா் மக்கள் நலச்சங்கம் தலைவா் எஸ். சாஹாமாலீம், ரோட்டரி சங்க மண்டலப் பொறுப்பாளா் பி. ஆா்.ரவி, ஓய்வுப்பெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். கிருஷ்ணமூா்த்தி மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். பள்ளித் தலைமையாசிரியா் சி. செந்தில்குமாா் வரவேற்றாா். பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் எஸ். இளங்கோ நன்றி கூறினாா்.
இதேபோல், நாகூா் தேசிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், பள்ளியின் இணைச் செயலாளா் எம்.ஜி.கே. நிஜாமுதீன் பங்கேற்று, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாணவா்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். நாகூா் வணிகா் சங்கத்தைச் சோ்ந்த ஏ.எல். ஹிமாயத் அலி, டி.வி.சிவராஜ், நாகூா் வணிகா் சங்க முன்னாள் தலைவா் கே. பிலிப்ராஜ், முஸ்லிம் சங்கத் தலைவா் வி.சாதிக், பள்ளி தலைமையாசிரியை க. விஜயலெட்சுமி மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.