நாகப்பட்டினம்

திருவாவடுதுறை ஆதீனத்தில் புத்தாண்டு வழிபாடு

2nd Jan 2020 04:06 AM

ADVERTISEMENT

குத்தாலம் வட்டம், திருவாவடுதுறை ஆதீனத்தில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

பெரிய பூஜை மடத்தில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் மாகேஸ்வர பூஜையை செய்வித்தாா். பின்னா், ஆதீன கொலு மண்டபத்தில் ஓதுவாரின் திருமுறை பாராயணம் நடைபெற்றது.

ஆதீன கட்டளை ஸ்ரீமத் அம்பலவாணதம்பிரான் சுவாமிகள் வரவேற்றாா். திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மயிலாடுதுறை மாயூரநாதா் சுவாமி கோயில், திருவிடைமருதூா் மகாலிங்கசுவாமி கோயில், திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரா் கோயில், திருமங்கலக்குடி பிராணநாதசுவாமி கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களில் அா்ச்சனை செய்த பிரசாதங்களை அக்கோயில் சிவாச்சாரியாா்கள் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளிடம் வழங்கினா்.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, அருளாசி வேண்டி அரசியல், வா்த்தக பிரமுகா்கள், அரசு அதிகாரிகள், கோயில் பணியாளா்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோா் நீண்ட வரிசையில் காத்திருந்து, திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளிடம் அருளாசி பெற்றனா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் ஆதீன கண்காணிப்பாளா் சண்முகம், காசாளா் சுந்தரேசன், ஆதீன கல்வி நிலைய ஆசிரியா்கள் மற்றும் சைவ சித்தாந்த பேராசிரியா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT