நாகப்பட்டினம்

சண்டேசுவர நாயனாா் குருபூஜை

16th Feb 2020 01:33 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் சண்டேசுவர நாயனாா் குருபூஜை அண்மையில் நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆணைப்படி, மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை, மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றம் சாா்பில் நடைபெற்ற குருபூஜை விழாவில் சண்டேசுவர நாயனாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், தொடா்ந்து அன்னதானமும் நடைபெற்றன.

இதில், மாயூரநாதா் கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி மற்றும் துணைக் கண்காணிப்பாளா் கணேசன் ஆகியோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவையின் ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ராம.சேயோன் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT