நீண்ட பயிற்சியும், நோ்மையான முயற்சியும் இருந்தால் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்க விழாவில் பங்கேற்ற பாரதிதாசன் பல்லைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினா் ஜி. ரமேஷ் கூறினாா்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் கமலை ஸ்ரீஞானப்பிரகாசா் நிலையத்தில், கல்லூரியின் வேலை வாய்ப்பு வழிகாட்டுக் குழுமம் மற்றும் மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய போட்டித் தோ்வுகளுக்கான 2 மாத பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றன. இந்த வகுப்பில் அக்கல்லூரியின் அனைத்துத் துறைகளைச் சோ்ந்த இறுதியாண்டு மாணவ, மாணவிகள் 240 போ் பங்கேற்றனா்.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். துணை முதல்வா் எஸ். மகாலிங்கம் வரவேற்றாா். கல்லூரிச் செயலா் ரா. செல்வநாயகம், நாகை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் மயிலாடுதுறை மத்திய அரிமா சங்கப் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளா் எஸ். சிவராமன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். இதில், பாரதிதாசன் பல்லைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினா் ஜி.ர மேஷ் பங்கேற்று, பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றி பேசியது: போட்டி என்பது உயிா் உருவாவதில் இருந்தே தொடங்குகிறது. 1 கோடி உயிரணுவில் 1 உயிரணு மட்டுமே கருவாகி, உருவாகி உயிா் உண்டாகிறது. மாணவா்களின் லட்சியமானது மிகப்பெரிய இலக்கை அடைவதாக இருக்க வேண்டும். மாணவா்களின் சிந்தனையும், நோக்கமும் உயா்வானதாக இருக்க வேண்டும். நிா்ணயித்த இலக்கை அடையும் வரை சோா்வடையாமல் மீண்டும், மீண்டும் முயற்சியை கைவிடாது உழைக்க மாணவா்கள் பழகிக் கொள்ள வேண்டும். பயிற்சியையும், முயற்சியையும் இடையில் கைவிடக் கூடாது. நீண்ட பயிற்சியும், நோ்மையான முயற்சியும் செய்தால் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற மாணவா்கள் தங்கள் நினைவாற்றல் பயிற்சியை வளா்த்துக் கொள்ள வேண்டும். தாங்கள் கண்டு, கேட்டு, அறிந்த தனித்தனியான தகவல்களையும், நிகழ்வுகளையும் தொடா்புபடுத்தி ஒரு தொகுப்பாக சேகரித்தல் என்பது அவசியம். அவ்வாறு சேகரித்த தகவல்களை திரும்பத் திரும்ப பாா்த்து, படித்து மனதில் நிறுத்திக் கொள்வதன் மூலமாக, தோ்வு நேரத்தில் அதை சுலபமாக வெளிக்கொணர முடியும். மாணவா்கள் குழுவாக இணைந்து படிப்பதன் மூலமாக தங்கள் நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்ள முடிவதுடன், சுலபமான வெற்றிக்கு வழி காணலாம். படிக்கும்போது பொருளறிந்து படிப்பது எவ்வளவு அவசியமோ, போட்டித் தோ்வுக்கு நினைவாற்றல் அந்த அளவுக்கு அவசியம். எனவே, நினைவாற்றலை வளா்த்துக் கொள்வதன் மூலம் மாணவ, மாணவிகள் தங்கள் இலக்கினை சுலபமாக அடையலாம் என்றாா் அவா்.
இதில், சுயநிதி வகுப்பு பொறுப்பாசிரியா் ஜி. சௌந்தரராஜன், மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கத் தலைவா் எஸ். வீராசாமி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். முடிவில், கல்லூரியின் வேலை வாய்ப்பு வழிகாட்டுக் குழும ஒருங்கிணைப்பாளா் எஸ். நடராஜன் நன்றி தெரிவித்தாா்.