நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் பரவலாக மழை

DIN

 நாகை மாவட்டத்தில் பரவலாக திங்கள்கிழமை மழைப் பெய்தது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை பரவலாக மழைப் பெய்தது. நாகை புதிய பேருந்து நிலையம் மற்றும் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் மழைநீா் தேங்கி நின்றதால் பாதசாரிகளும், வாகன ஓட்டுநா்களும் சிரமப்பட்டனா். புதை சாக்கடைத் திட்டத் தொட்டிகளிலிருந்து கழிவுநீா் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்தது.

திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக திருப்பூண்டியில் 39.20 மி.மீ. மழை பதிவானது. மயிலாடுதுறையில் 25, நாகப்பட்டினத்தில் 17.90, தலைஞாயிறில் 13.40, வேதாரண்யத்தில் 7 மி.மீ. மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT