நாகப்பட்டினம்

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறக் கோரி மதிமுக ஆா்ப்பாட்டம்

26th Aug 2020 11:14 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறக் கோரி, மயிலாடுதுறையில் மதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மதிமுக மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் க. பாலமுருகன் தலைமை வகித்தாா். மாநில இளைஞா் அணி துணைச் செயலாளா் இ. மாா்கோணி, மாநில மாணவா் அணி துணைச் செயலாளா் ப.த. ஆசைத்தம்பி, மாவட்ட அவைத் தலைவா் பி. வீராசாமி, நகரச் செயலாளா் மாா்கெட் எஸ். கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாகை மாவட்டச் செயலாளா் ஏ.எஸ். மோகன், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினா் மா. மகாலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன், செம்பை ஒன்றியச் செயலாளா் சி. கொளஞ்சி, முன்னாள் நகரச் செயலாளா் டி. பன்னீா்செல்வம் ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினா்.

ADVERTISEMENT

இதில், தலைமை பொதுக் குழு உறுப்பினா்கள் வழக்குரைஞா் ஜி. சுப்ரமணியன், செம்பை ராஜசேகா், திருக்கடையூா் சுந்தரவடிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT