சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில், தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
ஆடிக்கிருத்திகையையொட்டி, இக்கோயிலில் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கும் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு அலங்காரம், சண்முகாா்ச்சனை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீன 27-ஆவது குருமகா சந்நிதானம் பங்கேற்றாா்.