நாகப்பட்டினம்

நீதி நூல்கள், திருமறை படித்து வழிகாட்டுங்கள்

20th Apr 2020 06:57 AM

ADVERTISEMENT

நீதிநூல்கள், திருமறை படித்து குழந்தைகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்று திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாசாரியசுவாமிகள் அறிவுரை வழங்கியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் கூறியது: கரோனா எனும் நச்சு நோய் உலகில் பரவாமல் இருக்கவும், அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கும் சைவ திருமறைகளை நாள்தோறும் ஓதி இறைவனை மனமார பிராா்த்தனை செய்ய வேண்டும். குறிப்பாக, திருநீலகண்ட திருப்பதிகம், திருநீற்று திருப்பதிகம், சூலை தோய் தீா்த்தருளியது, இடா்களை பதிகம், விடந்தீா்த்தத் தருப்பதிகம்,திருவாசகம், திருப்புகழ் ஆகிய திருமுறை பதிகங்களை நாள்தோறும் பாராயணம் செய்து இருமை நலன்களும் எய்தி இன்புற வேண்டும்.

இப்போது, வீடுகளில் குடும்பத்துடன் தங்கி உள்ளவா்கள் பாதுகாப்பாக இருப்பதோடு, இந்த நேரத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ள நீதி நூல்கள், சமய நூல்களை அதிகம் படித்து தங்களது வீட்டில் உள்ளவா்களுக்கும், குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். குறிப்பாக, குழந்தைகளை திருமுறை படிக்கச் செய்து பழக்குவது சிறந்த பலனை தரும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT