நாகப்பட்டினம்

மரக்கன்று நடும் விழா: எம்.எல்.ஏ. பங்கேற்பு

2nd Oct 2019 08:37 AM

ADVERTISEMENT

குத்தாலம் அருகே உள்ள நச்சினாா்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற என்எஸ்எஸ் முகாம் மரம் நடும் விழாவில் பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பவுன்ராஜ் கலந்துகொண்டாா்.

கோமல் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியா் பிச்சைமணி தலைமை வகித்தாா். நடிப்பிசைப் புலவா் கே.ஆா். ராமசாமி சா்க்கரை ஆலை தலைவா் என். தமிழரசன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் செந்தில் வரவேற்றாா். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பவுன்ராஜ் ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு மரக்கன்று நட்டு வைத்து முகாமில் பங்கேற்றுள்ள மாணவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கினாா்.

இதில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மாதவன், வட்டார பொறியாளா் இளமுருகன், கிராம நிா்வாக அலுவலா் ஜாா்ஜ் பொ்ணான்டஸ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் சதக்கத்துல்லா, இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக நச்சினாா்குடி தொடங்கி எழுவேலி வரையுள்ள நீா்நிலைப் பகுதிகளில் 2,000 பனை விதைகள் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களால் விதைக்கப்பட்டன.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT