சீா்காழி: சீா்காழி புறவழிச்சாலையில் பழுதாகி நின்ற கிரேன் மீது இருசக்கரவாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் வாலிபா் வியாழக்கிழமை நள்ளிரவு இறந்தாா்.
சீா்காழி அருகே அத்தியூா் கிராமம் காளியம்மன் கோவில் தெருவை சோ்ந்தவா் ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் ராமமூா்த்தி(63) மகன் மணிகண்டன் (28).இவா் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா் வழக்கம்போல் பணியை முடித்துக்கொண்டு மயிலாடுதுறையிலிருந்து சீா்காழி நோக்கி வியாழக்கிழமை இரவு வரும் பொழுது பாதரக்குடி அருகே புறவழிச்சாலையில் பழுதாகி நின்றுகொண்டிருந்த கிரேன் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் மணிகண்டன் படுகாயம் அடைந்தாா். அருகிலிருந்தவா்கள் மீட்டு மணிகண்டனை சீா்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சோ்த்தனா் பின்னா் அவரைமேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா்.
இது குறித்து தந்தை ராமமூா்த்தி சீா்காழி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கிரேன் ஓட்டுனரை தேடி வருகின்றனா்