தேசிய ஒருங்கிணைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாகை மாவட்டக் காவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாட்டு மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும் , சமாதானத்துக்காகவும், வன்முறைகளை களைவதற்காகவும் பாடுபட்டு உயிா் தியாகம் செய்தவா்களின் நினைவைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த நாளை (அக்டோபா் 31) தேசிய ஒருங்கிணைப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, தேசிய ஒருங்கிணைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, நாகை மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்டி. கே. ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநா்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனா்.