வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்

சீர்காழி சட்டநாதபுரம் ரவுண்டானா பகுதியில் அகற்றப்பட்ட வேகத் தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

சீர்காழி சட்டநாதபுரம் ரவுண்டானா பகுதியில் அகற்றப்பட்ட வேகத் தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
சீர்காழியை அடுத்த சட்டநாதபுரத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிதம்பரம் ஆகிய  பகுதிகளுக்குச் செல்லும்  நான்கு வழிச்சாலை  சந்திப்பு உள்ளது.  இப்பகுதியில் வாகனங்கள் விபத்தில் சிக்குவதை  தவிர்க்கும்   வகையில், நான்கு சாலைகளின் சந்திப்புகளில் வேகத் தடைகள் அமைக்கப்பட்டிருந்தன. 
இந்நிலையில், சீர்காழி புறவழிச் சாலை, நெடுஞ்சாலை பகுதியில் பழுதடைந்திருந்த  சாலை  சீரமைக்கப்பட்டு,  புதிய சாலை சில  மீட்டர்  தூரத்துக்கு அமைக்கப்பட்டது. அப்போது, அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்கவில்லை. இதனால்,  இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, நான்கு சாலைகளிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் என ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com