நூல் விமர்சன அரங்கம்

வாகை இலக்கியக் கூடல் சார்பில் நூல் விமர்சன அரங்கம் மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

வாகை இலக்கியக் கூடல் சார்பில் நூல் விமர்சன அரங்கம் மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
யாழி கிரிதரனின் நூல் விமர்சன அமர்வு, ஸ்டாலின் சரவணனின் 'இரு நிழல்களின் ஒப்பனை" கவிதைத் தொகுப்பு குறித்து ஆங்கரை பைரவியின் நூல் மதிப்புரை, 'ரொட்டிகளை விளைவிப்பவன்" கவிதைத் தொகுப்பு குறித்து, கவிஞர் புலியூர் முருகேசன் மதிப்புரை, 'படுகைத் தழல்" நாவல் குறித்து, கவிஞர் யவனிகா ஸ்ரீராமின் மதிப்புரை ஆகியவை நடைபெற்றது. நிகழ்ச்சியை துவாரகா சாமிநாதன் தொகுத்து வழங்கினார். இனித்தன் நன்றி தெரிவித்தார். 
மயிலாடுதுறை தமிழ்ச்சங்க நிறுவனர் ஜெனிபர் எஸ்.பவுல்ராஜ், தேரழந்தூர் கம்பர் கழகச் செயலாளர் முத்து. சானகிராமன்,  கவிஞர் வே.இரா.பூபதி, குயில்தோப்பு அறிவியக்க ஒருங்கிணைப்பாளர் மன்னர்மன்னன், முத்தமிழ் அறிவியல் மன்ற செயலாளர் விழிகள் சி.ராஜ்குமார், அன்பே சிவம் அறக்கட்டளை பொறுப்பாளர் எல்.ராஜேந்திரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் நன்னானே ரமேசு, துரைராஜ், அறிவழகன், ரவி, கவிஞர் ஸ்ரீதேவி கண்ணன், குறளன்பன், முருக தீட்சண்யா உள்ளிட்ட திரளான இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com