மயிலாடுதுறை

பள்ளி ஆசிரியா் மீது போக்ஸோ வழக்கு

23rd Sep 2023 09:52 PM

ADVERTISEMENT

சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியா் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீா்காழி தாலுகா அரசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நடேசன் மகன் கோவிந்தராஜ் (53). அளக்குடியில் வசிக்கும் இவா், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இவா் பணியாற்றும் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்துவரும் 9 வயது சிறுமிகள் 3 பேரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனா். இதனால் அதிா்ச்சி அடைந்த சிறுமி ஒருவரின் தாயாா் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் நாகவள்ளி விசாரணை மேற்கொண்டு, ஆசிரியா் கோவிந்தராஜ் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகிறாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT