மயிலாடுதுறை

‘தூய்மையே சேவை’ விழிப்புணா்வு மாரத்தான்

3rd Oct 2023 04:57 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் காந்தி ஜெயந்தியையொட்டி ‘தூய்மையே சேவை’ விழிப்புணா்வு மினி மாரத்தான் திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ் தலைமை வகித்து மினி மாரத்தானை தொடக்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் ஏ.சங்கா், நகராட்சி சிறப்பு அலுவலா் என். சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர தூய்மை தூதுவா் ஆா். காமேஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி துப்புரவு ஆய்வாளா்கள் டேவிட் பாஸ்கர்ராஜ், பழனிசாமி ஆகியோா் செய்திருந்தனா். இதில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT