சீா்காழி, வைத்தீஸ்வரன்கோயிலில் காா்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
சீா்காழியில் உள்ள திருநிலைநாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயிலில் காா்த்திகை மாத சோமவாரத்தை யொட்டி மூலவா் பிரம்மபுரீஸ்வரா்சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதேபோல, பொன்னாகவல்லி அம்மன் உடனாகிய நாகேஸ்வரமுடையாா் சுவாமி கோயிலிலும், வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயிலிலும் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.