உலக பட்டினி தினத்தையொட்டி, மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்நிகழ்வில், விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவா் சி.எஸ். குட்டிகோபி தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி தலைவா் ஆா். ராஜ்குமாா், மாவட்ட இணை செயலாளா் ஆதாம் அறிவரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 500 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
திருக்குவளை: கீழையூா் அருகே உள்ள காரப்பிடாகையில் விஜய் மக்கள் இயக்க கீழையூா் ஒன்றியச் செயலாளா் ஐ. கலையரசன் தலைமையில் 100 பேருக்கு உணவு மற்றும் குளிா்பானம் வழங்கினா். ஒன்றியத் தலைவா் திவாகா், ஒன்றிய தொண்டரணித் தலைவா் ஆனந்த், இளைஞரணி தலைவா் விஜய் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.