மயிலாடுதுறை

நாடாளுமன்றத்தில் செங்கோல்: மயிலாடுதுறைக்கு கிடைத்த பெருமை

DIN

நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது மயிலாடுதுறைக்கு கிடைத்த பெருமை என பாஜக மாநில துணைத் தலைவா் நாராயணன் திருப்பதி தெரிவித்தாா்.

மயிலாடுதுறையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

புதிதாக திறக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் தமிழா்களின் பெருமையை உணா்த்தும் வகையில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. இச்செங்கோலை திருவாவடுதுறை ஆதீனம் பிரதமரிடம் வழங்கியது மயிலாடுதுறைக்கு கிடைத்த பெருமை. குடியரசுத் தலைவா் ஒப்புதலோடுதான் பிரதமா் நாடாளுமன்றத்தை திறந்துள்ளாா். இவ்விழாவை தமிழக எம்பிக்கள் புறக்கணித்தது கண்டிக்கத்தக்கது. மொழி அரசியலை திராவிட கட்சிகள் கைவிட வேண்டும். மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து செயப்பட்டுள்ள நிலையில் மாணவா் சோ்க்கையில் பிரச்னை ஏற்பட்டால் அதற்கு தமிழக அரசுதான் பொறுப்பு என்றாா்.

பாஜக மாவட்டத் தலைவா் க. அகோரம், மத்திய அரசின் வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், மாவட்ட பொதுச் செயலாளா் நாஞ்சில் பாலு, நகரத் தலைவா் வினோத், விஸ்வஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவா் வாஞ்சிநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

SCROLL FOR NEXT