மயிலாடுதுறையில் முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கூட்டம் மாவட்ட ஆட்சியா் (எனது) தலைமையில் ஜூன் 7-ஆம் தேதி மதியம் 3 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதில், மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் சாா்ந்தோா்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.