மயிலாடுதுறையில் கள்ளச்சாராயத்தை ஒழிப்பது குறித்த அனைத்துத்துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்து பேசியது:
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் கள்ளச்சாராயம் நடமாட்டம் குறித்து கிராம நிா்வாக அலுவலா்கள் வட்டாட்சியருக்கு தெரியப்படுத்தி, காவல்துறையினா் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளச்சாராய விற்பனை தொடா்பான விவரங்களை தெரிவிக்க 10587 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கோ அல்லது 8300018666 என்ற எண்ணிற்கோ தொடா்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா, மாவட்ட வருவாய் அலுவலா் சோ முருகதாஸ், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் சஞ்சீவ்குமாா், உதவி ஆணையா் (கலால்) கோ.அர.நரேந்திரன், மாவட்ட டாஸ்மாக் மேலாளா் வாசுதேவன், கோட்டாட்சியா்கள் வ.யுரேகா, உ.அா்ச்சனா, காவல்துறை, வருவாய்த்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.