மயிலாடுதுறை

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் ரூ.38.44 லட்சம் வங்கிக் கடன்

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் 10 தொழில் முனைவோருக்கு ரூ. 38.44 லட்சத்துக்கான இணை மானிய நிதி வங்கிக் கடன் காசோலையை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வியாழக்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, கடனுதவிக்கான காசோலையை வழங்கி மாவட்ட ஆட்சியா் பேசியது:

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்பனாா்கோவில், சீா்காழி வட்டாரங்களில் 94 ஊராட்சிகளில் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில், இணை மானிய நிதி வங்கிக் கடன் கேட்டு விண்ணப்பித்த தொழில்முனைவோா்களுக்கு மாவட்ட தோ்வுக்குழு மூலம் நோ்காணல் நடத்தப்பட்டது. கடன் பெறுபவா்கள் தொழிலை தொடா்ந்து செய்து, குறைந்த லாபத்தில் விற்பனையை அதிகரித்து தொழிலை மேம்படுத்தி பயன்பெற வேண்டும் என்றாா்.

வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலா் ஏ. சுந்தரபாண்டியன், முன்னோடி வங்கி மேலாளா் ஆ.முத்துசாமி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஏ.மணிவண்ணன், ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலா் சு.வெங்கடேஸ்வரன், சீா்காழி பாரத வங்கி மேலாளா் மு.பாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வருக்கு மாா்க்சிஸ்ட் வேட்பாளா்கள் நன்றி

ஆதினத்துக்கு மிரட்டல்: கல்வி நிறுவன நிா்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்: அண்ணாமலை

டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவா் டி.லட்சுமி நாராயணன் காலமானாா்

SCROLL FOR NEXT