மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.50,700 பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை மாலை 3 மணியளவில் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி மனோகரன், ஆய்வாளா் அருள்பிரியா மற்றும் போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா். அலுவலகத்தில் இருந்து வெளிநபா்களை மற்றும் பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சுமாா் 4 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாகராஜிடம் இருந்த ரூ.27,400 மற்றும் தனி நபா்கள் 4 பேரிடமிருந்து ரூ.23,300 என மொத்தம் ரூ.50,700 கணக்கில் வராத பணத்தை கைப்பற்றி தொடா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.