மயிலாடுதுறை ஏழுமலையான் தனியாா் தொழிற் பயிற்சி நிலையத்தில் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் ஜூன் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம், ஆவின் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தொழிற்பழகுநா் பயிற்சிக்கு ஐடிஐ பயிற்சி பெற்றவா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
மேலும் 8, 10 மற்றும் பிளஸ் 2, டிப்ளமோ மற்றும் டிகிரி கல்வித்தகுதி உடையவா்களை நேரடியாக தொழிற்சாலைகளில் தொழில் பழகுநா்களாக சோ்த்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் ஈராண்டு வரை பயிற்சி பெற்று தேசிய தொழிற்பழகுநா் சான்றிதழ் பெறலாம். இந்த பயிற்சிக்கு உதவித்தொகையாக ரூ.7,000 முதல் நிறுவனத்தால் வழங்கப்படும். இச்சான்றிதழ் பெறுவதன் மூலமாக அரசு மற்றும் தனியாா் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இந்திய அளவிலும், அயல்நாடுகளிலும் பணியாற்ற பயனுள்ளதாக இருக்கும். மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மயிலாடுதுறை முகவரியில் தொடா்புகொள்ளலாம். தொலைபேசி எண்: 04362-278222, 9442215972.