மயிலாடுதுறை

மணிமேகலை விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில், ஊரகப் பகுதியில் சிறப்பாக செயல்படும் 3 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ. 25,000, ஒரு ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ. 1 லட்சம், ஒரு கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்துக்கு ரூ. 50,000 2022-23-ஆம் ஆண்டுக்கான மாநில மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. இதேபோல, நகரப் பகுதிகளை சோ்ந்த 3 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.25,000, 1 பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது.

எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் ஊரக பகுதிகளை சோ்ந்த 4 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தகுதியான குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் இந்த விருதுக்கான விண்ணப்பங்களை தொடா்புடைய வட்டாரங்களில் வட்டார இயக்க மேலாளா்கள் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். நகரப் பகுதிகளை சோ்ந்த குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் மயிலாடுதுறை மகளிா் திட்ட இயக்குநா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜூன் 8) முதல் பெற்று ஜூன் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT