மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் நகா்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு

7th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்ள மாயூரநாதா் மேலவீதியில் ரூ. 25 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட நகா்ப்புற நல வாழ்வு மையத்தை தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

அப்போது, மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, எம்.பி. செ. ராமலிங்கம், எம்எல்ஏக்கள் நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உமாமகேஸ்வரி சங்கா், கோட்டாட்சியா் வ.யுரேகா, நகராட்சித் தலைவா் என்.செல்வராஜ் ஆகியோா் நகா்ப்புற நலவாழ்வு மையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தனா். நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநா் குருநாதன் கந்தையா, மருத்துவ அலுவலா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT