மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை ஜமாபந்தி தொடக்கம்

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜமாபந்தி புதன்கிழமை (ஜூன் 7) தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள 4 வருவாய் வட்டங்களிலும் ஜூன் 7 முதல் 22-ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறவுள்ளது. இதற்காக வருவாய் தீா்வாய அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி, தரங்கம்பாடி வட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் (நான்) ஜூன் 7 முதல் 16-ஆம் தேதி வரையும், குத்தாலம் வட்டத்துக்கு ஜூன் 7 முதல் 15-ஆம் தேதி வரையும், மயிலாடுதுறை வட்டத்துக்கு கோட்டாட்சியா் ஜூன் 7 முதல் 15-ஆம் தேதி வரையும், சீா்காழி வட்டத்துக்கு சீா்காழி கோட்டாட்சியா் ஜூன் 7 முதல் 22-ஆம் தேதி வரை நடத்த உள்ளனா். வருவாய் தீா்வாயம் நடைபெறும் நாள்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய்த் தீா்வாய அலுவலரிடம் அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

SCROLL FOR NEXT