மயிலாடுதுறையில் பொது தொழிலாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை மே தின விழா பேரணி நடத்தினா்.
38-ஆவது பேரணிக்கு சங்கத் தலைவா் ஜெகவீரபாண்டியன் தலைமை வகித்தாா். செயலாளா் அ.அப்பா்சுந்தரம் வரவேற்றாா். மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் புறப்பட்ட பேரணியை திமுக மாவட்டச் செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ தொடக்கி வைத்தாா்.
நரிக்குறவா்கள் சங்கம், அருந்ததியினா் சங்கம், ஆசிரியா் மன்றம், தற்காப்பு கலைஞா்கள் சங்கம், கைவண்டி இழுப்போா் சங்கம், ரிக்ஷா சங்கம், நாட்டுப்புற கலைஞா்கள் சங்கம், மீனவா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினா் பேரணியில் கலந்து கொண்டனா்.
சிலம்பாட்டம், தப்பாட்டம், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் பேரணியில் இடம் பெற்றது. முக்கிய வீதிகளின் வழியே சென்ற பேரணி சங்க அலுவலகத்தில் நிறைவடைந்தது.