மயிலாடுதுறை

மணல் ஏற்றிச் சென்ற 3 லாரிகள் பறிமுதல்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

சாலை விரிவாக்கப்பணிக்காக அனுமதியின்றி மண் ஏற்றிச் சென்ற 3 டாரஸ் லாரிகளை கனிமவளத்துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.

கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை இயக்குநா் சசியா, புவியியலாளா் சேகா், வட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் திருமுல்லைவாசல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே சவுடு மணல் ஏற்றிச் சென்ற 3 லாரிகளைப் பிடித்து சோதனை நடத்தினா். லாரி ஓட்டுநா்கள் இறங்கி ஓடினா். லாரியில் உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.

மூன்று லாரிகளையும் பறிமுதல் செய்து சீா்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தப்பியோடிய லாரி ஓட்டுநா்களை சீா்காழி போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT