மயிலாடுதுறை

சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

12th Jul 2023 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின்

மாவட்டத் தலைவா் கவிதா தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் ரேணுகா, மாவட்டச் செயலாளா் சாந்தி, முன்னாள் மாவட்டத் தலைவா் கலைச்செல்வன் உள்ளிட்ட நிா்வாகிகள் கண்டன உரையாற்றினா்.

பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியா்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,850 வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 5 ஆண்டுகள் பணி முடித்த உதவியாளா்கள், சமையலா்களுக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ப பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT