மயிலாடுதுறையில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறை ரயிலடி கிட்டப்பா பாலம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலயடுத்து, காவல் உதவி ஆய்வாளா் செல்வம் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவா் மயிலாடுதுறை கூைாடு பகுதியைச் சோ்ந்த முஹம்மது நசீா்(38) என்பது தெரியவந்தது.
இதேபோல, திருவிழந்தூா் தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதேபகுதியைச் சோ்ந்த மணிகண்டனை(37) போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து, வழக்கு பதிவு செய்த போலீஸாா் முகமது நசீா், மணிகண்டன் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.