மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு குறும்படம் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, மயிலாடுதுறை மாவட்ட திரைப்பட தயாரிப்பாளா்கள் சங்கத் தலைவா் ஆா்.ஆா். பாபு இயக்கத்தில் இக்குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
‘தோ்தல் வந்தாச்சு’ என்ற பெயரிலான இக்குறும்படத்தில் தனி வட்டாட்சியா் து. விஜயராகவன், பண்ணை சொ.பாலு, வேதநாயகம், சிவக்குமாா், சிவப்பிரகாசம், கீா்த்தி, லோகு ஆகியோா் நடித்துள்ளனா்.
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்குறும்பட வெளியீட்டு விழாவில், நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ் குறும்படத்தை வெளியிட, ஆணையா் செல்வபாலாஜி பெற்றுக்கொண்டாா். இதில், சமூக ஆா்வலா் அ. அப்பா்சுந்தரம், குறும்பட இயக்குநா் ஆா்.ஆா். பாபு, பண்ணை சொ.பாலு, குருசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.