மயிலாடுதுறை மாவட்டத்தில் 108 அவசரஊா்தியில் பணியாற்ற ஆட்கள் தோ்வு முகாம் செவ்வாய்க்கிழமை (ஜன.31) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கண்ணன் தெரிவித்துள்ளது:
மயிலாடுதுறை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் பணிபுரிய ஓட்டுநா் மற்றும் மருத்துவ உதவியாளா்கள் பணிக்கான ஆள் சோ்ப்பு முகாம் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள சிசிசி சமுதாயக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
ஓட்டுநருக்கான மாத சம்பளம் ரூ.15,235, மருத்துவ உதவியாளருக்கு மாத சம்பளம் ரூ.15,435 வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 044- 28888060/75/77 அல்லது 7397701807 என்ற எண்னில் தொடா்பு கொள்ளலாம்.