குத்தாலம் அருகே மேலமங்கைநல்லூரில் உள்ள ஸ்ரீதிரௌபதி அம்மன் மற்றும் வலம்புரி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா ஜன.23-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து, பூா்வாங்க பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை யாகசாலை பூஜைகள் முடிவுற்று பூா்ணாஹூதி நடந்து மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.