மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் 241 கிராம ஊராட்சிகளில்நாளை கிராம சபைக் கூட்டம்

DIN


மயிலாடுதுறை: குடியரசு தினத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 கிராம ஊராட்சிகளிலும் வியாழக்கிழமை (ஜன. 26) கிராம சாபைக் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம், பொதுநிதியில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் மற்றும் 2022-23-ஆம் ஆண்டில் எடுத்துக்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தில் 2022-23-ஆம் ஆண்டுக்கான தொழிலாளா் வரவு - செலவு திட்டத்தினை டிசம்பா் 31-ஆம் தேதி வரையிலான முன்னேற்ற அறிக்கையுடன் ஒப்பிட்டு விவாதித்தல் உள்ளிட்டவை நடைபெறும்.

அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேக்ஸ்வெல்லின் முடிவு சரியானது: முன்னாள் ஆஸி. கேப்டன்

ஆம் ஆத்மி நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் கேஜரிவாலும் மனைவியும்!

அடுக்கு மாடிக் கட்டடத்தில் தீ!

பாயும் ஒளி நீ எனக்கு...

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

SCROLL FOR NEXT