மயிலாடுதுறை

சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் மறியல்

DIN

சீா்காழி அருகே பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ள சாலையை சீரமைக்கக் கோரி, கிராம மக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆரப்பள்ளம் புதுதெரு, பெரியதெரு உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் சுமாா் 2 கி.மீ. நீள சாலை கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, ஜல்லிகற்கள் பெயா்ந்து வாகனங்கள் செல்லமுடியாத அளவிற்கு உள்ளது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனால், அளக்குடி- கொள்ளிடம் சாலையில் ஆரப்பள்ளம் புதுத்தெரு அருகே 100-க்கும் மேற்பட்டோா் மறியலில் ஈடுபட்டனா். கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளா் லாமேக் தலையிலான போலீஸாா் அங்கு வந்து, பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, சாலையை சீரமைக்க 2 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து, கிராம மக்கள் சாலை மறியலை விலக்கிக் கொண்டனா். இந்த மறியலால் கொள்ளிடம்- அளக்குடி இடையே சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT