மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே ரயிலில் அடிபட்டு 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
சென்னையில் இருந்து திருச்செந்தூா் செல்லும் விரைவு ரயில் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் அடிபட்டு உயிரிழந்தாா். இறந்தவா் யாா் என்று விவரம் தெரியவில்லை.
இதுகுறித்து மயிலாடுதுறை இருப்புப்பாதை காவல் ஆய்வாளா் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.